யாழில் மாடு திருடியவர்கள் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் நேற்றையதினம் மாடு ஒன்று களவாடப்பட்டுள்ளது. மாடு மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்தவேளை நேற்று(24.10.2022) மதியம் இவ்வாறு களவு போயுள்ளது. மாடு மீட்பு இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மாட்டினையும் மீட்டுள்ளனர். மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.